புதன், 13 மார்ச், 2024

என்.கணேசனின் புதிய நாவல் “சதுரங்கம்” வெளியீடு



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் ”சதுரங்கம்” இன்று அச்சில் வெளியாகியுள்ளது. 646 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.730.

இந்த நாவலின் கதைக்களம் அரசியல் சதுரங்கம். 

ஒரு பிரபல நடிகை கொலை செய்யப்பட, அவள் காதலன் தன் உயிருக்குப் பயந்து தலைமறைவாகிறான். அது தற்கொலை என்று காட்ட போலீசாரும், ஆளும் கட்சியினரும் முயல, அதில் சந்தேகப்படும் ஒரு நிருபர் துப்புத் துலக்க முனைப்பு காட்டுகிறான். மறைந்த ஒரு அரசியல் பெருந்தலைவரின் பேரனான அந்த நிருபர் அந்தத் துப்பறியும் வேலையோடு, தங்கள் குடும்பத்தில் மறைந்திருக்கும் ரகசியங்களையும் அறிய முயல, அவனும் அரசியலுக்கு இழுக்கப்படுகிறான். பின் நடிகையின் தலைமறைவான காதலனும் கொல்லப்பட, அவன் இறப்பதற்கு முன் கொலையாளியாக யாரும் எதிர்பாராத ஒரு பெரும் புள்ளியைக் குற்றம் சாட்டி எழுதிய கடிதமும், வீடியோவும் வைரல் ஆகிறது. வழக்கும் பரபரப்பாக நீதிமன்றத்திற்கு வருகிறது. அந்த நிருபரையும் கொல்ல முயற்சி நடக்கிறது. பின் என்னவெல்லாம் ஆகின்றன, அரசியல் சதுரங்கத்தில் எப்படியெல்லாம் காய்கள் தந்திரமாக நகர்த்தப்படுகின்றன என்பதை கடைசி வரை பரபரப்புடனும், விறுவிறுப்பு விலகாமலும் சொல்லி, சிந்திக்கவும் வைக்கும் நாவல் இது.  


நாவலை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/dp/8196319665



 

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இரு ஆன்மீக நூல்கள்-மகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மீகம்- மறுவெளியிடு!

எழுத்தாளர் என்.கணேசன் எழுதி தினத்தந்தியில் தொடராகவும், நூலாகவும் வெளிவந்த இரண்டு ஆன்மீக நூல்களின் மறுபதிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.

முதலாவது நூல் மகாசக்தி மனிதர்கள். இதன் மூன்றாம் பதிப்பை இன்று என்.கணேசன் புக்ஸ் வெளியிட்டுள்ளது.


இரண்டாவது நூல் அமானுஷ்ய ஆன்மீகம். இதன் இரண்டாம் பதிப்பை இன்று என்.கணேசன் புகஸ் வெளியிட்டுள்ளது. 


புத்தகங்களை அமேசானில் ஆன் லைனிலும், பதிப்பகத்தாரிடமிருந்து நேரடியாகவும் வாசகர்கள் வாங்கிக் கொள்ளலாம். நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண் அல்லது  ngnaeshanbooks@gmail.com மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.

அமேசானில் வாங்க லிங்க்:

https://www.amazon.in/l/27943762031?ie=UTF8&marketplaceID=A21TJRUUN4KGV&me=AU2MIH1I41Z2K



வெள்ளி, 1 செப்டம்பர், 2023

எங்களிடம் உள்ள என்.கணேசன் நூல்களின் விவரங்கள்!

 அன்பு வாசகர்களே,


உங்களில் சிலர், எங்களிடம் உள்ள எழுத்தாளர் என்.கணேசனின் நூல்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை ஒரே பதிவில் போட்டு அவ்வப்போது புதியன வரும் போது அப்டேட் செய்து வந்தால் அவர்களுக்கு வாங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்.


அவர்கள் வேண்டுகோளை ஒட்டி நாங்கள் எங்களிடம் இருப்பு இருக்கிற என்.கணேசனின் நூல்களின் விலை விவரங்களையும், வாங்கும் முறையையும் இங்கு தந்திருக்கிறோம். இதை இந்த தளத்தில் வலது புறம் நீங்காத பதிவாகவும் இருக்கும்படி செய்திருக்கிறோம். 


நன்றி

என்.கணேசன் புக்ஸ்


கையிருப்பில் உள்ள என்.கணேசனின் நூல்கள் மற்றும் விலை


நாவல்கள்

சாணக்கியன் (இரு பாகங்கள்)                     ரூ.900/- (சரித்திர நாவல்)

சத்ரபதி ..............................................................      ரூ.700/- (சரித்திர நாவல்)

பரம(ன்) இரகசியம் ....................                        ரூ.750/-

அமானுஷ்யன் .......................                               ரூ.600/-

புத்தம் சரணம் கச்சாமி .............    ..                 ரூ.700/-

இருவேறு உலகம் .......................                          ரூ.750/-

இல்லுமினாட்டி  ......................                              ரூ.650/-

நீ நான் தாமிரபரணி  .........................                 ரூ.280/-

மனிதரில் எத்தனை நிறங்கள் ............           ரூ.500/-

விதி எழுதும் விரல்கள் ...........................             ரூ.130/-

யாரோ ஒருவன்? .....................................              ரூ.680/-

யோகி.........................................................................ரூ.800/- 

மாயப் பொன்மான்..............................................ரூ.250/-

சதுரங்கம்     ......................................................      ரூ.730/-


சிறுகதைத் தொகுப்பு

என்.கணேசன் சிறுகதைகள் .........................    ரூ.220/-


ஆழ்மனசக்தி நூல்கள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் ........................   ரூ.320/-

ஆழ்மனசக்தி அடையும் வழிகள் ..............        ரூ.250/-

விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள்..........    ரூ.230/-


ஆன்மீக நூல்கள்

ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள்.......    ரூ.170/-

அறிவார்ந்த ஆன்மீகம்............................              ரூ.250/-    

கீதை காட்டும் பாதை ......................................    ரூ.350/-

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்…….     ரூ.170/-

மகாசக்தி மனிதர்கள் ........                                    ரூ.300

அமானுஷ்ய ஆன்மீகம்......                                    ரூ.200


தன்னம்பிக்கை நூல்கள் 

வாழ்ந்து படிக்கும் பாடங்கள் .....................        ரூ.150

இங்கே நிம்மதி ....................................................     ரூ 200

உங்களை முன்னேற்ற 5 நிமிடத்துளிகள்     ரூ.200/-

Attain Success & Retain Peace                                      ரூ.200/-


2 IN 1 Book) ஆன்மீகம்+தன்னம்பிக்கை

பிரசாதம் (ஆன்ம தேடலும், தெளிவும்) &

தோல்வி என்பது இடைவேளை .........       ரூ.250/-      


மற்ற நூல்கள்

ஜாதகம் பயன்படுத்துவது எப்படி? ...       ரூ.90/-  

 

இந்த நூல்களை வாங்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

 

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)

Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)

வங்கிக் கணக்கு : N.Ganeshan Books

                                  DBS (Former LVB)  Kovaipudur Branch

                                  IFSC Code DBSS0IN0188

                                  A/c No.0188386000001146

                                  SWIFT CODE DBSSINBBXXX


தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

 

அமேசானில் ஆன்லைனிலும் இந்த நூல்களை வாங்கலாம். லிங்க்

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

Attain Success & Retain Peace - ஆங்கில நூல் வெளியீடு

 


என்.கணேசன் எழுதிய ஆங்கிலப் புத்தகம் Attain Success & Retain Peace விரிவாக்கத்தோடு இன்று வெளியாகியுள்ளது.

இதில் -


வெற்றிக்கும் மனநிம்மதிக்குமான பத்து விதிகள்

தோல்விகள் பின்னடைவில் இருந்து மீளும் வழிகள்

மன அழுத்தத்திலிருந்து வெளிவருவது எப்படி?

எதிர்மறை எண்ணங்கள், டென்ஷன் தவிர்ப்பது எப்படி?

வெற்றி, அமைதி இரண்டும் அடைந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?


ஆகியவை 162 பக்கங்களில் ஆழமாகவும், தெளிவாகவும் விளக்கப்பட்டு இருக்கின்றன. விலை ரூ.200/-

இந்த நூலை அமேசானிலோ நேரடியாகவோ நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8196319630

நேரடியாக வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் அல்லது nganeshanbooks@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.




’உங்களை முன்னேற்ற 5 நிமிடத் துளிகள்’ நூல் வெளியீடு


 

என்.கணேசன் எழுதிய “உங்களை முன்னேற்ற 5 நிமிடத் துளிகள்” நூல் இன்று என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியாகியுள்ளது.


உங்களை முன்னேற்றவும், உயர்த்திக் கொள்ளவும் நிறைய படிக்க ஆவல் இருக்கிறது, ஆனால் அதற்கு நேரமில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காகத் தான் இந்தப் புத்தகம். மகத்தான வெற்றி, ஞானம், பேரமைதி, பெருமகிழ்ச்சி பெற வழிகாட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களிலிருந்து அறிஞர்களின் மிக முக்கிய வழிகாட்டுதல்களை வடிகட்டி எடுத்துத் தந்திருக்கிறது இந்த நூல். 120க்கும் மேற்பட்ட அருமையான வாழ்க்கைக் குறிப்புகளுக்கு எளிமையான விளக்கங்களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் படிக்கவும் உங்களுக்கு சுமார் ஐந்து நிமிடங்கள் தான் ஆகும். இந்த ஒரு நூலைப் படித்தால் பல நூல்களைப் படித்தறியும் பலனை நீங்கள் பெறலாம்


156 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/- 


இந்த நூலை அமேசானிலோ, எங்களிடமிருந்து நேரடியாகவோ வாங்கிக் கொள்ளலாம்.


ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8196319649


எங்களிடமிருந்து வாங்க 94863 09351 எண்ணிலோ nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

Attain Success & Retain Peace (Revised & enlarged Edition)


என்.கணேசனின் ஆங்கிலப் புத்தகம் Attain Success & Retain Peace மேலும் புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது.  இந்த நூல் குறித்த பின்னட்டைக் குறிப்பு -

Do you want to achieve remarkable success without losing peace of mind? If the answer is “yes!” then this book is for you.

Here you’ll find –

Ten Rules to Success & Peace

How to deal with setbacks and Failures?

How to come out of depression?

How to deal with stress & toxic thoughts?

Signs of transformation

Many other tips to achieve success and Peace.

இந்த நூலை கிண்டிலில் படிக்க  லிங்க் -

https://www.amazon.in/dp/B0CF1ZN5CD

வெளிநாட்டு வாசகர்கள் மற்றும் கிண்டில் வாசகர்கள் இந்த மின்னூலை வாங்கிப் படித்துக் கொள்ளலாம். 

இந்தப் புத்தகம் பத்து நாட்களில் அச்சுப்புத்தகமாகவும் என்.கணேசன் புக்ஸால் வெளியிடப்படவிருக்கிறது.  162 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.200/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அச்சில் வந்தவுடன் தெரிவிக்கிறோம்.

புதன், 2 ஆகஸ்ட், 2023

இன்று தினமலரில் யோகி மற்றும் கீதைக்கு வந்திருக்கும் விமர்சனங்கள்!

 இன்று 3.8.2023 தினமலர் (மதுரை) பதிப்பில் எழுத்தாளர் என்.கணேசனின் யோகி நாவலுக்கும், கீதை காட்டும் பாதை நூலுக்கும் விமர்சனங்கள் வந்துள்ளன.



நன்றி: தினமலர் (மதுரை) 

சனி, 3 ஜூன், 2023

வெள்ளி, 19 மே, 2023

என்.கணேசனின் ஐந்து நூல்களின் அடுத்த பதிப்புகள் வெளியீடு.

 என்.கணேசனின் இரண்டு நாவல்களும், இரண்டு ஆழ்மனசக்தி நூல்களும், இங்கே நிம்மதி நூலும் வெற்றிகரமாக  அடுத்த பதிப்பைக் கண்டுள்ளன.


இருவேறு உலகமும், யாரோ ஒருவன் நாவலும் இரண்டாம் பதிப்பு வந்துள்ளன.


ஆழ்மனதின் அற்புத சக்திகள் ஒன்பதாவது பதிப்பும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் இரண்டாவது பதிப்பும் வெளியாகியுள்ளன.



இங்கே நிம்மதி நூல் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. 



இந்த நூல்களை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)

Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)

வங்கிக் கணக்கு : N.Ganeshan Books

                                  DBS (Former LVB)  Kovaipudur Branch

                                  IFSC Code DBSS0IN0188

                                  A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நாவலை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விலாசத்தை அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். பணத்தை அனுப்பி வைத்தால் நாவல் அனுப்பி வைக்கப்படும்.


அமேசானில் ஆன்லைனிலும் இந்த நூல்களை வாங்கலாம். லிங்க் -

என்.கணேசனின் கீதை காட்டும் பாதை வெளியீடு!

 


இதுவரை கிண்டிலில் மின்னூலாக மட்டுமே இருந்து வந்த என்.கணேசனின் கீதை காட்டும் பாதை தற்போது அச்சு நூலாக என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 296 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.350/- 

நூலுக்கு திரு. என்.கணேசன் எழுதிய முன்னுரை இதோ - 

முன்னுரை                                       

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்பட்டேன். ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்க்கையில் அமைதி வேண்டுபவர்களுக்கும், மெய்ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கும் கீதை காட்டும் வழியை தேடல் உள்ள அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையான நடையில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த நூல்.

கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது. மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.

காந்தியடிகள் சொன்னது போல் கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள்.  இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் முக்கியமான அனைத்துச் சுலோகங்களையும் சொல்லி அதற்கான விளக்கங்களை என் அறிவுக்கு எட்டிய அளவில் விவரித்திருக்கிறேன். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன்.

இதை எந்திரத்தனமாய் படித்துக் கொண்டே போவதை விட சிறிது நேர வாசிப்புக்குப் பின் அது குறித்து சிந்தியுங்கள். முக்கியமாக படிப்பினூடே உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிற  சிந்தனைகள், மாற்றி யோசிக்கத் தூண்டும் மெய்ஞான உண்மைகள், ஆமாயில்ல என்று பிரமிக்க வைக்கும் பொறி தட்டும் சத்தியங்கள் படிக்க நேர்ந்தால் கண்களை மூடிக் கொண்டு மனதில் சிறிது நேரமாவது அதை ஊறப்போடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இந்த நூல் உங்களுக்குப் பயன்படுவது அந்த வகையிலேயே முழுமையாக இருக்கும். பின் மறுபடி தொடருங்கள்

நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எந்தவொரு உபதேசத்தின் நோக்கமும் பயனும் ஆகும். மகத்தானதொரு புனிதநூலின் மெய்ஞான உண்மைகளை எனக்குப் புரிந்த அளவு நானும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த  நூல்  படிப்பவர்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்களைச் சிறிதேனும் ஏற்படுத்தினால் எழுதிய பயன் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சி அடைவேன்.

வாருங்கள் கீதை காட்டும் பாதையில் பயணிப்போம்

அன்புடன்

என்.கணேசன்

நூலை அமேசானில் ஆன்லைனில் வாங்கலாம். லிங்க் -

https://www.amazon.in/dp/8195612857?ref=myi_title_dp

அல்லது என்.கணேசன் புக்ஸிலிருந்து நேரடியாகவும் வாங்கலாம். தொடர்புக்கு அலைபேசி எண்.9486309351 மற்றும் மின்னஞ்சல் nganeshanbooks@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்.