என்.கணேசனின் ”சிறுகதைகள்” தொகுப்பு நூல் அக்டோபர் 2017ல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அவர் ஆனந்த விகடனில் எழுதிய முதல் சிறுகதை “ஊருக்கு மகான் ஆனாலும்”முதல் ஆஸ்திரேலிய தமிழ் இணையதளம் நடத்திய அமரர் அருண்விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016ல் பரிசு பெற்ற அவருடைய சிறுகதை “அரங்கன் கணக்கு” வரை இதுவரையிலான அவரது அனைத்து சிறுகதைகளும் அடங்கிய தொகுப்பு இது. இச்சிறுகதைத் தொகுப்பில் தினமலர் சிறுகதைப் போட்டியில் பரிசுகள் பெற்ற “இலையுதிர்காலம்” மற்றும் “சுடும் உண்மை, சுடாத அன்பு” இலக்கிய சிந்தனை விருது பெற்ற “புன்னகைத்தார் பிள்ளையார்” உட்பட பல்வேறு காலகட்டத்தில் வெளியான சிறுகதைகள் உள்ளன.
அவரது அனைத்து சிறுகதைகளிலும் மானுடமே அடித்தள நாதமாக இருந்திருக்கிறது. பெரும்பாலான சிறுகதைகளில் மனிதனின் உயர்குணங்களே சிறப்பான அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அன்பு, காதல், கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை, வாழும் கலை, அறிவுபூர்வமான அணுகுமுறை ஆகியவையே கருவாகவும், பாடமாகவும் அமைந்திருக்கின்றன. கடவுளில் இருந்து கடைகோடி மனிதர்கள் வரை கதாபாத்திரங்களாக இருக்கும் இச்சிறுகதைகளைப் படித்து முடிக்கையில் நினைவில் தங்குவதும், மின்னுவதும் மானுடமாக இருக்கும்.
இச்சிறுகதைகள் தொகுப்பின் விலை ரூ.220/-
ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நூலை வாங்கலாம். லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
(அல்லது)
இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக