பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)
திரு என்.கணேசனின் இந்த நூல் தற்போது அமேசான் கிண்டிலில் மின்னூலாக இருக்கிறது.
லிங்க் https://www.amazon.in/dp/B08429C2L1
புத்தகத்தை அமேசானில் வாங்க லிங்க்
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
முன்னுரை
ஆன்மீகம் மனிதனை இறைநிலையை உணரவும்
பிரதிபலிக்கவும் தூண்டுகிறது என்பதே அதன் நோக்கமும் அவசியமுமாக இருக்கிறது.
ஆன்மீகத்தின் மூலமாக இறைவனின் உள்ளம் குளிர வைக்கவும், அதன் மூலமாக அருள் பெறவும்
மனிதன் முயல்வது அவனது ஞானத்தின் குறைபாடாகவே கருத வேண்டும். ஏனென்றால் உலகத்தைப்
படைத்துக் காக்கும் இறைவன் தன் படைப்புகள் தன்னைத் தொழ வேண்டும் என்றும், கௌரவிக்க
வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் என்று நினைப்பதே இறைவனைத் தன் தரத்துக்கு
மனிதன் இழுக்கும் முயற்சியாகவே எண்ண வேண்டும்.
நம் முன்னோரின் கதைகளிலும், புனித நூல்களிலும் பேரறிவையும், ஞானத்தையும் கொண்ட
ஆழ்ந்த கருத்துகளும் இருக்கின்றன. அதே போல் அறிவுக்கு உகந்ததாய் இல்லாத
கற்பனைகளும், அஞ்ஞான இடைச்செருகல்களும் கூடவே இருக்கத் தான் செய்கின்றன. ஒரு
மனிதன் சொல்லும் சாதாரண வாக்கியமே கூட ஒருவர் இன்னொருவருக்குச் சொல்ல ஆரம்பித்தால்
ஐம்பதாவது ஆள் சொல்லும் வாக்கியம் ஆரம்ப வாக்கியத்துக்குச் சற்றும்
சம்பந்தமில்லாததாகவே இருக்கும் வேடிக்கையை நம்மால் பார்க்க முடியும். அப்படி
இருக்கையில் இறை தூதர்களாலும், ஞானிகளாலும் சொல்லப்பட்ட கருத்துகள் எந்த அளவு அதே
புனிதத்துடன் சரியாக நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன என்பது கேள்விக்குறியே.
இறை வார்த்தைகளாகவும், ஞானிகள் வார்த்தைகளாகவும் இன்று ஆன்மீக மார்க்கத்தில்
சொல்லப்படுபவை எந்த அளவு சரியாக இருக்கும் என்பதை மனிதன் தன் அறிவாலும்,
பக்குவத்தாலுமே அறிய முடியும். கண்மூடித்தனமான நம்பிக்கைகளும், அறிவைப்
பயன்படுத்தாத பின்பற்றல்களும் ஆன்மீகத்தை மூட நம்பிக்கைகளாகவும், நாத்திகத்தை விட
மோசமானதாக ஆக்கி விட முடியும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
தற்காலிக மனிதனுக்கு ஆன்மீகத் தேடல் இருக்கிறது. ஆனால் எது சரி எது சரியல்ல
என்பதில் தெளிவில்லாமல் குழப்பமே அவனிடம் மிஞ்சியிருக்கிறது. அந்தக் குழப்பத்தைப்
பயன்படுத்திக் கொண்டு எத்தனையோ போலி ஆன்மீகவாதிகள் தங்களை வேகமாக வளர்த்துக்
கொள்கிறார்கள். ஆன்மீகத்தில் தெளிவிருந்தால் மட்டுமே இது போன்ற போலிகளிடம் ஏமாறும்
அவசியமோ அவலமோ இல்லாமல் போகும்.
ஆகவே உண்மையின் உரைகல் நம் அறிவாகவும், ஞானமாகவும், பக்குவமாகவுமே இருக்க
வேண்டும். அப்படி உண்மையாக இருப்பதையே ஒருவன் ஆன்மீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த ஆன்மீகமே ஒருவனை இறைநிலைக்கும், மானுட நன்மைக்குமாய் உயர்த்தும். அந்த
ஆன்மீகமே நாம் நாட வேண்டியதும். பின்பற்ற வேண்டியதுமான மார்க்கம்.
அந்த வகை ஆன்மீகத்தையும், ஞானத்தையும், வாழ்க்கை நெறியையும் அலசும் சில சிந்தனைகளைத்
தொகுத்து “பிரசாதம்” என்ற இந்த நூலில் நான் தந்திருக்கிறேன். இந்த ஆத்ம சிந்தனைகள்
உங்களுக்குள் ஒரு தேடலையும், தெளிவையும், மாற்றத்தையும் கண்டிப்பாக ஏற்படுத்தும்
என்பதற்கு உறுதி அளிக்கிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
இந்த நூலில் முப்பது ஆன்மீகக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான கருத்துகளைக் கொண்டதாகவும், ஆத்ம தேடலுக்குத் தெளிவைத் தருவனவாகவும் இருக்கின்றன. ஆன்மீகத் தேடல் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கும்.
Really hos books are.gifted for me.thank ji
பதிலளிநீக்கு