இன்றைய (28.05.2023) தினகரன் நாளிதழில் யோகி நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்:
எழுத்தாளர் என்.கணேசன் எழுதியுள்ள அனைத்து நூல்களின் அனைத்து விவரங்களும், நூற்குறிப்புகளும், சில நாவல்களின் இலவச அத்தியாயங்களும் இங்குள்ளன.
சனி, 27 மே, 2023
வெள்ளி, 19 மே, 2023
என்.கணேசனின் ஐந்து நூல்களின் அடுத்த பதிப்புகள் வெளியீடு.
என்.கணேசனின் இரண்டு நாவல்களும், இரண்டு ஆழ்மனசக்தி நூல்களும், இங்கே நிம்மதி நூலும் வெற்றிகரமாக அடுத்த பதிப்பைக் கண்டுள்ளன.
இருவேறு உலகமும், யாரோ ஒருவன் நாவலும் இரண்டாம் பதிப்பு வந்துள்ளன.
ஆழ்மனதின் அற்புத சக்திகள் ஒன்பதாவது பதிப்பும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் இரண்டாவது பதிப்பும் வெளியாகியுள்ளன.
இங்கே நிம்மதி நூல் இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது.
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)
Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)
வங்கிக் கணக்கு : N.Ganeshan Books
DBS (Former LVB) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
என்.கணேசனின் கீதை காட்டும் பாதை வெளியீடு!
இதுவரை கிண்டிலில் மின்னூலாக மட்டுமே இருந்து வந்த என்.கணேசனின் கீதை காட்டும் பாதை தற்போது அச்சு நூலாக என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. 296 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.350/-
நூலுக்கு திரு. என்.கணேசன் எழுதிய முன்னுரை இதோ -
முன்னுரை
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
பகவத் கீதைக்கு ஆதிசங்கரர் முதல் எத்தனையோ ஞானிகள் உரை எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ பண்டிதர்கள் வியாக்கியானம் செய்து இருக்கிறார்கள். அந்த அளவு ஞானமோ, தகுதியோ எனக்கு இல்லை என்றாலும் ஒரு சாமானியனாக நான் கீதை இன்றைய கால கட்ட மனிதர்களுக்கு எப்படி வழி காட்டுகிறது என்பதை அதனைப் படித்து ஆழ்ந்து சிந்தித்த ஆர்வக் கோளாறு காரணமாக எழுத முற்பட்டேன். ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்க்கையில் அமைதி வேண்டுபவர்களுக்கும், மெய்ஞானத்தை அடைய விரும்புபவர்களுக்கும் கீதை காட்டும் வழியை தேடல் உள்ள அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையான நடையில் எழுத வேண்டும் என்ற ஆவலின் விளைவே இந்த நூல்.
கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது. மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.
காந்தியடிகள் சொன்னது போல் கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள். இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் முக்கியமான அனைத்துச் சுலோகங்களையும் சொல்லி அதற்கான விளக்கங்களை என் அறிவுக்கு எட்டிய அளவில் விவரித்திருக்கிறேன். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன்.
இதை எந்திரத்தனமாய் படித்துக் கொண்டே போவதை விட சிறிது நேர வாசிப்புக்குப் பின் அது குறித்து சிந்தியுங்கள். முக்கியமாக படிப்பினூடே உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிற சிந்தனைகள், மாற்றி யோசிக்கத் தூண்டும் மெய்ஞான உண்மைகள், ஆமாயில்ல என்று பிரமிக்க வைக்கும் பொறி தட்டும் சத்தியங்கள் படிக்க நேர்ந்தால் கண்களை மூடிக் கொண்டு மனதில் சிறிது நேரமாவது அதை ஊறப்போடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இந்த நூல் உங்களுக்குப் பயன்படுவது அந்த வகையிலேயே முழுமையாக இருக்கும். பின் மறுபடி தொடருங்கள்.
நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எந்தவொரு உபதேசத்தின் நோக்கமும் பயனும் ஆகும். மகத்தானதொரு புனிதநூலின் மெய்ஞான உண்மைகளை எனக்குப் புரிந்த அளவு நானும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த நூல் படிப்பவர்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்களைச் சிறிதேனும் ஏற்படுத்தினால் எழுதிய பயன் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சி அடைவேன்.
வாருங்கள் கீதை காட்டும் பாதையில் பயணிப்போம் …
அன்புடன்
என்.கணேசன்
நூலை அமேசானில் ஆன்லைனில் வாங்கலாம். லிங்க் -
https://www.amazon.in/dp/8195612857?ref=myi_title_dp
அல்லது என்.கணேசன் புக்ஸிலிருந்து நேரடியாகவும் வாங்கலாம். தொடர்புக்கு அலைபேசி எண்.9486309351 மற்றும் மின்னஞ்சல் nganeshanbooks@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்.
புதன், 17 மே, 2023
என்.கணேசனின் புதிய நாவல் “யோகி” வெளியீடு!
எழுத்தாளர் என்.கணேசனின் புதிய நாவல் “யோகி” இன்று வெளியாகிறது. என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் இன்று வெளியிடப்பட்ட இந்த நாவல் 716 பக்கங்கள் கொண்டது.
இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2025ல் வெளியாகியுள்ளது. விலை ரூ.820
கதைச் சுருக்கம்:
யோகாலயம் எனப்படும் பிரபல ஆசிரமத்தில் உள்ள ஒரு பெண் துறவியின் உயிருக்கு ஆபத்து என்று அப்பெண்ணின் தந்தைக்கு மொட்டைக் கடிதம் வர, அதிர்ச்சியுடன் அவளைக் காணச்செல்லும் அவளது தந்தைக்கு, ஆசிரம விதிகளைக் காரணம் காட்டி, காண அனுமதி மறுக்கப்படுவதில் ஆரம்பிக்கிறது நாவலின் கதைக்களம். பின்பு அடுத்தடுத்து நிகழும் கொலைகளுக்கும் காரணமோ, கொலையாளிகளோ கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. உண்மையைக் கண்டுபிடிக்க திறமை வாய்ந்த துப்பறியும் அதிகாரி ரகசியமாய் அங்கே துறவியாகப் போய்ச் சேர்கிறான். குற்றவாளிகளை மட்டுமல்லாமல் ஒரு உண்மையான யோகியையும் தேடும் தேடலும் தொடர்கிறது. மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதில் ஆவிகளுடன் தொடர்பு, ஏவல் சக்தி, செய்வினை, போன்ற அமானுஷ்யங்களும் பிணைந்து, நட்பு, காதல், கர்மா, உண்மையான ஆன்மீகம் ஆகியவையும் அடையாளம் காட்டப்படுவது இந்த நாவலின் தனிச்சிறப்பு.
விறுவிறுப்பான இந்த நாவலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi (Name Shubha)
Phonepe UPI ID: nganeshanbooks@ybl (Shubha)
வங்கிக் கணக்கு : N.Ganeshan Books
DBS
(Former LVB) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
என்.கணேசனின் புதிய நாவல் மாயப்பொன்மான் வெளியீடு!
எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய புதிய நாவல் “மாயப் பொன்மான்” இன்று வெளியாகின்றது. என்.கணேசன் புக்ஸ் பதிப்பகம் வெளியிட்ட இந்த நாவல் 216 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/-
கதைச்சுருக்கம்:
எழுத்திலும், வாழ்க்கையிலும்
சமரசம் செய்து கொள்ளாமல் உயர்ந்த இலட்சியங்களுடன் வாழும் ஒரு பெண் எழுத்தாளரின் காதலன்
திரைப்பட நடிகனான பின் தடம் மாறுகிறான். அவளுடைய அருமையான
நாவல் ஒன்று பிரபலமாகி திரைப்படமாக்கப்பட, அவளும்
திரையுலகில் நுழையும் சூழல் உருவாகிறது. அதன் பின் அவள்
சந்திக்கும் சவால்களை காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள், ஆசாபாசங்கள்
ஆகியவற்றை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல் இது. மாயக்கவர்ச்சிகள்
நிறைந்த திரையுலகில் உண்மைக் காதல் தாக்குப்பிடிக்குமா, இலட்சியங்களைத்
தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லும் இந்த நாவலைப்
படிக்கையில், கதாநாயகி மட்டுமல்லாமல் மற்ற கதாபாத்திரங்களும் உங்கள் மனதில் நெருக்கமாகி விடுவார்கள்.!
விறுவிறுப்பான இந்த நாவலை வாங்கிப் படிக்க விரும்பும் உள்நாட்டு வாசகர்கள் நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். ரூ.1000/-க்கு மேல் நூல்களை வாங்குபவர்களுக்கு தபால் செலவு தள்ளுபடி உண்டு. நூல்களின் விலையை மட்டும் அனுப்பினால் போதும். நூல்கள் குரியர் அல்லது ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
சனி, 29 ஏப்ரல், 2023
விரைவில் 2 நாவல்களும் கீதையும் வெளியீடு!
என்.கணேசன் எழுதியிருக்கும் இரண்டு புதிய நாவல்கள் பத்து தினங்களில் வெளியாகவிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல் நாவல் பெரிய நாவல் யோகி. இது ஒரு ஆன்மீக த்ரில்லர்.
இரண்டாவது நாவல் மாயப்பொன்மான். இது ஒரு சிறிய நாவல். அவரது வழக்கமான கதைகளில் இருந்து வித்தியாசப்படும் ஒரு காதல் கதை!
இதனுடன், இது வரை மின்னூலாக மட்டுமே இருக்கும், கீதை காட்டும் பாதை நூலும் அச்சு நூலாகவும் வெளியாகவுள்ளது.
நூல்கள் வெளியானவுடன் மற்ற எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறோம்.
இந்த வாரத்திலேயே கிடைத்திருக்க வேண்டிய புதிய நாவல்கள் பிரிண்டர்கள் சந்தித்த எதிர்பாராத சில பிரச்சினைகளால், கிடைக்க தாமதமாகியுள்ளன. யோகி, மாயப் பொன்மான், கீதை மட்டுமல்லாமல் பழைய ஐந்து நூல்களின் அடுத்த பதிப்பும் தந்திருப்பதாலும், யோகி போன்ற பெரிய நூல்களைத் தைக்காமல் வெளியிடுவதை நான் விரும்பாததாலும் என்னால் அவர்களை அவசரப்படுத்தவும் முடியவில்லை. 17.05.2023 அன்று கண்டிப்பாக எல்லா நூல்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023
பிரசாதம் நூலுக்கு தினத்தந்தி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் மதிப்புரை!
இன்றைய தினத்தந்தி (12.02.2023)யில் என்.கணேசனின் பிரசாதம் (ஆத்ம தேடலும், தெளிவும்) நூலுக்கு மதிப்புரை வந்துள்ளது.
ஜனவரி 2023 ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் பிரசாதம் நூலுக்கும், விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் நூலுக்கும் மதிப்புரைகள் வந்துள்ளன.
நன்றி: தினத்தந்தி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்
வியாழன், 12 ஜனவரி, 2023
தினமலரில் “விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள்” விமர்சனம்!
10.01.2023 தேதி தினமலர், சென்னை பதிப்பில் என்.கணேசனின் ’விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள்’ நூலுக்கு வந்திருக்கும் விமர்சனம் -
ஞாயிறு, 30 அக்டோபர், 2022
தினத்தந்தியில் ’புத்தம் சரணம் கச்சாமி’ விமர்சனம்!
இன்றைய (30.10.2022) தினத்தந்தியில் எங்கள் சமீபத்திய மறுவெளியீடான புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வந்துள்ள விமர்சனம் இதோ -
வியாழன், 13 அக்டோபர், 2022
புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினமலர் மதுரைப் பதிப்பில் விமர்சனம்!
அன்பு வாசகர்களே!
புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு இன்று (13.10.2022) தினமலர் மதுரை பதிப்பில் வந்துள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு -
ஞாயிறு, 9 அக்டோபர், 2022
தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூல் விமர்சனம்!
இன்று (9 அக்டோபர் 2022) தினத்தந்தியில் “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” நூலுக்கு வந்துள்ள விமர்சனம்.
வியாழன், 22 செப்டம்பர், 2022
விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் - புதிய நூல் வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
ஆழ்மனசக்தி நூல்கள் வரிசையில் மூன்றாவதாக “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” என்ற புதிய நூல் செப்டம்பர் 2022ல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பதிப்பு மே 2023ல் வெளியாகியுள்ளது.
முதலிரண்டு நூல்கள் அபூர்வ சக்திகள் பெற ஆழ்மனதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற வகையில் இருந்தன.
இந்தப் புதிய நூல் நாம் எப்படியெல்லாம் தவறாக நம் விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதை விளக்கி, விதியைத் திருத்தி எழுத ஆழ்மன சக்திகளை க்வாண்டம் என்னும் பிரபஞ்சக்களத்தில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதை விளக்குகிறது.
மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லா விட்டால் நாம் பெறும் அனைத்து அபூர்வ சக்திகளாலும் நாம் பெறும் பலன் தான் என்ன? எனவே வாழ்க்கையில் அமைதியையும், ஆரோக்கியத்தையும், மனநிறைவையும், வெற்றியையும் பெற ஆழ்மன சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும், அதற்கான சூழல்களையும், மனிதர்களையும் நம் வாழ்வில் எப்படி ஈர்ப்பது என்பதையும், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுடன் எளிமையாகவும் விரிவாகவும் இந்த நூல் உங்களுக்கு விளக்கும்.
184 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.230/-
நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.
இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -
https://www.amazon.in/dp/8195612849?ref=myi_title_dp
என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)
உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தம் சரணம் கச்சாமி நாவலின் மறுபதிப்பு வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வாசகர்கள் தந்த வரவேற்பு மகத்தானது. ப்ளாக்ஹோல் மீடியா வெளியிட்ட அந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்பனையாகித் தீர்ந்து சில மாதங்கள் ஆகின்றன. இந்த நாவலைப் படிக்காத புதிய வாசகர்கள் இந்த நாவலை வாங்கிப் படிக்க, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அமானுஷ்யனும், மைத்ரேயனும், லீ க்யாங்கும், மாராவும் சேர்ந்து கலக்கும் இந்த நாவலின் மறுபதிப்பை வெளியிடத் தீர்மானித்து தற்போது என்.கணேசன் புக்ஸில் வெளியிட்டிருக்கிறோம்.
608 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.700/-
நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.
இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -
https://www.amazon.in/dp/8195612830?ref=myi_title_dp
என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)
உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
13.10.2022 தினமலர் மதுரை பதிப்பில் புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்.![]()
செவ்வாய், 13 செப்டம்பர், 2022
2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
என்.கணேசன் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது.
பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு.
தோல்வி என்பது இடைவேளை - தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.
என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/-
அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும், புற வாழ்க்கையில் வெற்றியும், முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.
என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)
உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.









.jpg)











