ஞாயிறு, 30 அக்டோபர், 2022

தினத்தந்தியில் ’புத்தம் சரணம் கச்சாமி’ விமர்சனம்!

 இன்றைய (30.10.2022) தினத்தந்தியில் எங்கள் சமீபத்திய மறுவெளியீடான புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வந்துள்ள விமர்சனம்  இதோ - 



வியாழன், 13 அக்டோபர், 2022

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினமலர் மதுரைப் பதிப்பில் விமர்சனம்!

 அன்பு வாசகர்களே!


புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு இன்று (13.10.2022) தினமலர் மதுரை பதிப்பில் வந்துள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு -




வியாழன், 22 செப்டம்பர், 2022

விதியை மாற்றும் ஆழ்மனசக்திகள் - புதிய நூல் வெளியீடு!

 


 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

ஆழ்மனசக்தி நூல்கள் வரிசையில் மூன்றாவதாக “விதியை மாற்றும் ஆழ்மன சக்திகள்” என்ற புதிய நூல் செப்டம்பர் 2022ல் வெளியாகியுள்ளது.  இரண்டாம் பதிப்பு மே 2023ல் வெளியாகியுள்ளது.

முதலிரண்டு நூல்கள் அபூர்வ சக்திகள் பெற ஆழ்மனதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற வகையில் இருந்தன. 

இந்தப் புதிய நூல் நாம் எப்படியெல்லாம் தவறாக நம் விதியை எழுதிக் கொள்கிறோம் என்பதை விளக்கி, விதியைத் திருத்தி எழுத ஆழ்மன சக்திகளை க்வாண்டம் என்னும் பிரபஞ்சக்களத்தில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதை விளக்குகிறது. 

மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லா விட்டால் நாம் பெறும் அனைத்து அபூர்வ சக்திகளாலும் நாம் பெறும் பலன் தான் என்ன?  எனவே வாழ்க்கையில் அமைதியையும், ஆரோக்கியத்தையும், மனநிறைவையும், வெற்றியையும் பெற ஆழ்மன சக்திகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும், அதற்கான சூழல்களையும், மனிதர்களையும் நம் வாழ்வில் எப்படி ஈர்ப்பது என்பதையும், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுடன் எளிமையாகவும் விரிவாகவும் இந்த நூல் உங்களுக்கு விளக்கும்.

184 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ.230/-

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். 

இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8195612849?ref=myi_title_dp


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.



புத்தம் சரணம் கச்சாமி நாவலின் மறுபதிப்பு வெளியீடு!

 


 அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வாசகர்கள் தந்த வரவேற்பு மகத்தானது. ப்ளாக்ஹோல் மீடியா வெளியிட்ட அந்த நாவலின் முதல் பதிப்பு முற்றிலும் விற்பனையாகித் தீர்ந்து சில மாதங்கள் ஆகின்றன. இந்த நாவலைப் படிக்காத புதிய வாசகர்கள் இந்த நாவலை வாங்கிப் படிக்க, தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

எனவே அமானுஷ்யனும், மைத்ரேயனும், லீ க்யாங்கும், மாராவும் சேர்ந்து கலக்கும் இந்த நாவலின் மறுபதிப்பை வெளியிடத் தீர்மானித்து தற்போது என்.கணேசன் புக்ஸில் வெளியிட்டிருக்கிறோம். 

608 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ.700/- 

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். 


இந்த நூலை அமேசானில் வாங்க லிங்க் -

https://www.amazon.in/dp/8195612830?ref=myi_title_dp


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


13.10.2022 தினமலர் மதுரை பதிப்பில் புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு வந்திருக்கும் விமர்சனம்.👇



செவ்வாய், 13 செப்டம்பர், 2022

2 IN 1 Book - ”பிரசாதம் & தோல்வி என்பது இடைவேளை” நூல் வெளியீடு!


 

அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

என்.கணேசன் எழுதிய முதலிரண்டு நூல்கள் “பிரசாதம் (ஆத்ம தேடலும் தெளிவும்)” மற்றும் “தோல்வி என்பது இடைவேளை” இப்போது ஒரே நூலாக வெளியாகி உள்ளது. 

பிரசாதம் - மெய்ஞான, ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு. 

தோல்வி என்பது இடைவேளை -  தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு.

என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த 2 IN 1 நூல் 224 பக்கங்கள் கொண்டது. விலை ரூ.250/- 

அக வாழ்க்கையில் ஆனந்தமும், அமைதியும் பெறவும்,  புற வாழ்க்கையில் வெற்றியும்,  முன்னேற்றமும் அடையவும், எல்லோருக்கும் பயன்படக்கூடிய பல கட்டுரைகள் அடங்கிய நூல் இது. வாங்கிப் படித்துப் பயனடையும்படி  உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

நூலை வாங்கிப் படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணிலோ, nganeshanbooks@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.


இந்த நூலையும் அச்சில் உள்ள என் கணேசனின் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

சத்ரபதி, சாணக்கியன் நாவல்களை எழுதிய என்.கணேசன்

திங்கள், 11 ஏப்ரல், 2022

இங்கே நிம்மதி! நூல்





 ங்கே நிம்மதி, எங்கே நிம்மதி?” என்று தேடி அலைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்காய் பெருகி வருகிறது. நிம்மதிக்காக மனிதர்கள் என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். பெருமளவு பொருள்களையும், சொத்துக்களையும் சேர்த்துப் பார்க்கிறார்கள், புகழ் பின்னால் ஓடி அதை அடைந்து பார்க்கிறார்கள், குடி, போதை, செக்ஸ் ஆகியவற்றை பல விதங்களில் அனுபவித்துப் பார்க்கிறார்கள், ஆன்மீகம், சாமியார்கள் என்றெல்லாம் அடைக்கலம் புகுந்தும் பார்க்கிறார்கள். இத்தனை செய்தும் நிம்மதி அவர்களுக்கு தொடுவான தூரத்திலேயே நின்று விடுகிறதே ஒழிய சென்று அடைய முடிகிற இலக்காகத் தெரியவில்லை.



இந்த நிலையைப் போக்க குட்டிக் கதைகள் மூலமாகவும், உதாரணங்கள் மூலமாகவும் பல கோணங்களில் வாழ்க்கையையும், சூழ்நிலைகளையும், பிரச்னைகளையும் அலசி, யதார்த்த உண்மைகளை உணர்த்தி, பக்குவப்படுத்தி, ’இங்கே இருக்கிறது நிம்மதி’ என்று நிம்மதிக்கான வழிகளில் உங்கள் கையைப் பிடித்து இந்த நூலின் 42 கட்டுரைகள் உங்களை அழைத்துச் செல்லும்.

160 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் ஜனவரி 2015 ல் வெளியிடப்பட்டது.  இரண்டாம் பதிப்பு என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் மே 2023 ல் வெளியிடப்பட்டுள்ளது. விலை ரூ.200.

நிம்மதியில்லாத தருணங்களில் உங்களை அமைதிப்படுத்தவும், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் இந்த நூல் உதவும்.   

இந்த நூலை N.Ganeshan Booksக்கு நேரடியாகப் பணம் அனுப்பி தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

 தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.     


அமேசானில் ஆன்லைனிலும் இந்த நூலை வாங்கலாம். லிங்க்

https://www.amazon.in/dp/8196319606?ref=myi_title_dp


இந்த நூல் அமேசான் கிண்டிலில் மின் நூலாகவும்  வெளியிடப்பட்டிருக்கிறது. வாங்கிப் படிக்க லிங்க் -https://www.amazon.com/gp/product/B0893HJYK8/


தினமலரில் இங்கே நிம்மதி குறித்து வந்துள்ள விமர்சனம்!


துக்ளக்கில் இங்கே நிம்மதி குறித்து வந்துள்ள விமர்சனம்!

வியாழன், 10 மார்ச், 2022

சாணக்கியன், சரித்திர நாவல்


 


என்.கணேசன் எழுதிய சாணக்கியன் நாவல் தற்போது இரு பாகங்களாக வெளியாகியுள்ளது. என்.கணேசன் புக்ஸ் என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த வரலாற்று நாவலின் முதல் பாகம் 432 பக்கங்களையும், இரண்டாவது பாகம் 456 பக்கங்களையும் கொண்டது.  

2025 ஆகஸ்ட் மாதம் இந்த நாவலின் இரண்டாம் பதிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகம் விலை ரூ.530 இரண்டாம் பாகம் விலை ரூ570.


இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து மொத்தம் விலை ரூ.1100/- 


நாவலின் குறிப்பு: 



தனியொரு மனிதன், சர்வ வல்லமையுள்ள மகதப் பேரரசனை எதிர்த்து நின்று, அவனை ராஜ்ஜியத்தில் இருந்தே அகற்றுவேன் என்று சபதமிடுவதைக் கண்டு, பைத்தியம் என்றே பலரும் நினைத்தார்கள். இந்த நேரத்தில் தோல்வியே அறியாத அலெக்ஸாண்டரும் பாரதத்திற்குப் படையெடுத்து வந்தான். இந்த இரண்டு வலிமை மிக்க எதிரிகளையும் ஜெயிக்க விடாமல் தடுத்து, முன்னொரு காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மாணவன் சந்திரகுப்தனை மகத அரியணையில் அமர்த்தி, பின் ஒன்றிணைந்த பாரதம் உருவாக்குவது என்று ஒரு ஏழை ஆசிரியன் முடிவெடுத்தது கற்பனையிலும் சாத்தியமாக வாய்ப்பில்லை தான். ஆனால் எண்ணத்தில் வலிமையும், அறிவில் உச்சமும் கொண்டிருந்த சாணக்கியன், இது வரை உலகில் யாரும் சாதித்திராத சரித்திரம் படைத்தது எப்படி? ஒரு புதிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியது எப்படி? விறுவிறுப்புக்காகவும், சுவாரசியத்திற்காகவும் மட்டுமல்லாமல், மகத்தான வெற்றியைப் படிப்படியாக அடைவது எப்படி என்பதை அறியவும் சாணக்கியனைப் படியுங்கள்!


நாவலை  ஆன்லைனில் வாங்கலாம். 

இந்த நாவலையும் அச்சில் உள்ள என்.கணேசனின் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

நூலின் விலையுடன் தபால் செலவு ரூ.50/- ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபால்/குரியரில் பெற்றுக் கொள்ளலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

அனைத்து நூல்களின் விவரங்கள் அறிய  -

என்.கணேசன் நூல்கள் (nganeshanbooks.blogspot.com)


உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்க அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


சாணக்கியன் நாவலுக்கு தினத்தந்தியில் வந்த மதிப்புரை


சாணக்கியன் நாவலுக்கு தினமலர் மதுரை பதிப்பில் வந்த விமர்சனம்


துக்ளக்கில் வந்திருக்கும் விமர்சனம்






செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

யாரோ ஒருவன்? நாவல்



 

என்.கணேசன் எழுதிய இந்த மிக வித்தியாசமான நாவல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் டிசம்பர் 2020ல் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு என்.கணேசன் புக்ஸ் பதிப்பகத்தால் மே 2023ல் வெளியாகியுள்ளது.


 கதைக் குறிப்பு:


22 வருடங்களுக்கு முன் மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தில் தமிழக இளைஞன் ஒருவன் இறக்கும் அதே சமயத்தில் ஒரு சர்வதேசத் தீவிரவாதியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த ரா அதிகாரி தலைமறைவாகிறார். அவரது மகனும் ஒரு ரா அதிகாரியாகி, தந்தை ஈடுபட்டிருந்த பழைய வழக்கைத் தூசி தட்டி எடுக்கும் அதே சமயத்தில், அந்த தமிழக இளைஞனின் நண்பனாகச் சொல்லிக் கொண்டு ஒரு மர்ம மனிதன் தமிழகம் வருகிறான். இளம் ரா அதிகாரி அந்தப் பழைய வழக்கில் பின்னப்பட்ட சதிவலை, சூழ்ச்சிகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட, தமிழகத்தில் இறந்த இளைஞனின் நண்பர்கள் வாழ்வில் பரபரப்பான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள பின்னணியில் உள்ள மர்மத்தை, காதல், நட்பு, பாசம், தீவிரவாதம், நாகசக்தி, அமானுஷ்யம் முதலான அம்சங்களுடன் விவரிக்கும் இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்தால் உங்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொள்ளும்.  

வாசகர்களுக்காக இலவசமாக ஒரு அத்தியாயம்  இங்கே தரப்பட்டிருக்கிறது. 


யாரோ ஒருவன்?

என்.கணேசன்

 

1

 

ர்மோ ரக்ஷதி ரக்ஷித்” (தர்மம் காக்கப்படும் போது அதுவும் (நம்மைக்) காக்கிறது).

நரேந்திரன் ஐபிஎஸ் என்ற அந்த இளம் அதிகாரி தங்க எழுத்துகளில் மின்னிய அந்த வாசகத்தை ஒரு கணம் நின்று படித்தான். இந்திய உளவுத்துறையின் உச்ச அமைப்பான ரா (Research and Analysis Wing) வின் குறிக்கோளும் சித்தாந்தமுமாக இருந்த வாசகம் அது. ’ராவின் தலைமைச் செயலகத்தின் சுவரில் பொறிக்கப்பட்டு இருந்த அந்த வாசகத்தைப் படித்து விட்டு உள்ளே நுழைந்த போது அவன் மனம் இன்னதென்று குறிப்பாகச் சொல்ல முடியாதபடி பல உணர்ச்சிகளின் கலவையாக கனத்தது. தர்மத்தை நாம் காக்க மறக்கும் போது அதுவும் நம்மைக் காக்காமல் கைவிட்டு விடும் என்று கறாராக அந்த வாசகம் தெரிவிப்பது போல் அவனுக்குப் பட்டது.

 இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போரின் போது வெளிப்பட்ட இந்திய உளவுத்துறைக் குறைபாடுகளையும் பலவீனங்களையும் உணர்ந்து ஒரு வலிமையான உளவுத்துறை மிகவும் அவசியம் என்று முடிவு செய்து 1968ல் அமைக்கப்பட்டது தான்ராஅமைப்பு. பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் ரா அமைப்பின் தலைவர் செகரட்டரி என்று அழைக்கப் படுகிறார். ’ராவில் அதிகாரியாவது சுலபமல்ல. ஐபிஎஸ் தேர்வில் வெற்றியடைந்தவர்கள் மனோ தைரியம், அறிவுக்கூர்மை, அணுகுமுறை ஆகிய மூன்றிலும் கூடுதலாகச் சோதிக்கப்பட்ட பிறகே அங்கு அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நரேந்திரன் ஐபிஎஸ்ஸின் தந்தை மகேந்திரனும்ராவில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் தான்.  தந்தை வழியில் தானும் பயணித்து ஆசைப்பட்ட இலக்கை அடைந்திருக்கும் நரேந்திரன் பிரதமரைச் சந்தித்துத் தன் தனிக் கோரிக்கையை வைத்து ஒரு சிறப்பு வேலையைத் தானே பெற்றுக் கொண்டு வந்திருக்கிறான்

 ராவின் தலைவரின் அறைக்குள் கம்பீரமாக நுழைந்த நரேந்திரன் தலைவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெற்றிருக்கும் ஆணையைத் அவரிடம் நீட்டினான். அந்த ஆணை பிரதமர் அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சலிலும் வந்திருந்ததால் நரேந்திரன் நீட்டிய ஆணையைப் பிரித்துப்படிக்க வேண்டிய அவசியம் தலைவருக்கு இருக்கவில்லை. 

 பொதுவாக, புதிதாய் சேர்ந்திருக்கும் அதிகாரிகள் நேரடியாகப் பிரதமரைச் சந்தித்து இப்படி ஆணைகளைப் பெற்று வருவதை தலைவர்கள் ரசிப்பதில்லை.  அதற்குக் காரணம் தங்கள் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக அவர்கள் நினைத்து விடும் வாய்ப்பு இருப்பது தான். ஆனால் நரேந்திரன் மீது தலைவருக்கு அந்த அதிருப்தி வரவில்லை. அந்த இளம் அதிகாரியின் பின்னணியையும், நோக்கத்தையும் அவர் அறிந்திருந்தது தான் அதற்குக் காரணம். மேலும் அந்த இளம் அதிகாரி நேராக அவரிடம் வந்து அந்தக் கோரிக்கையை வைத்திருந்தாலும் அவர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளாமல் அனுமதி தந்திருக்க முடியாது.

 இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு ஃபைலைப் பரிசோதிக்கவும், தேவைப்பட்டால் மூடப்பட்டிருந்த அந்த வழக்கை மறுபடி திறந்து விசாரணை நடத்தவும் அவன் அனுமதி கேட்டிருக்கிறான். ஒரு முறை ரா உயர் அதிகாரிகளால் மூடப்பட்ட வழக்கை மறுபடி பரிசோதிக்கவும், அதைத் தொடரவும் பிரதமரைத் தவிர வேறு யாரும் அனுமதிக்க முடியாது. அந்த அனுமதியைப் பெறுவது சாதாரணம் அல்ல. ஆனால் நரேந்திரனும் சாதாரணமானவன் அல்ல.

அவன் தந்தை சம்பந்தப்பட்டிருக்கும் கடைசி வழக்கு அது. அது மூடப்பட்ட விதத்தில் அவனுக்கும் அவன் தாய்க்கும் திருப்தி இல்லை. அந்த ஒரு வழக்கின் பின் உள்ள உண்மையை அறியவும், குற்றவாளிகள் இப்போதும்  உயிரோடு இருந்தால் தண்டிக்கவும் தான் அவன் ஐபிஎஸ் அதிகாரியாகவே ஆகியிருக்கிறான். அவன் வாழ்வின் லட்சியமாக, மூச்சாக அந்தக் குறிக்கோளே இருந்திருக்கிறது.

 அப்படிப்பட்ட இளைஞன் ஐபிஎஸ் அதிகாரி ஆகி கூடுதல் திறமைகளும், மனோதிடமும் நிரூபித்துராவின் அதிகாரியுமாகி வந்து அந்த வழக்கின் விவரங்களையும் சொல்லி அனுமதி கேட்டு நின்ற போது பிரதமருக்கும் மறுக்க முடியவில்லை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பிறகு அவர் உடனடியாகத் தன் உதவியாளரை அழைத்து ஆணையைத் தயார் செய்யச் சொன்ன போது நரேந்திரன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினான். 

 முதலாவதாக அவன் அவரைக் கண்டு பேச அனுமதி எளிதில் கிடைக்கும் என்று நினைத்திருக்கவில்லை. அனுமதி கிடைத்துப் பேசினாலும் முழுவதுமாகப் பொறுமையுடன் காதுகொடுத்துக் கேட்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.  அப்படிக் கேட்டாலும் உடனடியாக ஆணையைத் தயார் செய்து கொடுப்பார் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

 பிரதமர் கையெழுத்திட்டு ஆணையை அவன் கையில் கொடுத்த போது அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் கண்ணீர் வழியத் தான் அவரிடமிருந்து அந்த ஆணையை அவன் வாங்கினான். அவனும் அவன் தாயும் வருடக்கணக்கில் செய்த பிரார்த்தனைகள்  வீண்போகவில்லைஅவனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இருக்கவில்லை. பிரதமர் அவனைத் தட்டிக் கொடுத்துஏதாவது கூடுதல் உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் வந்து கேள்என்றார்.

 கூப்பிய கைகளுடன் தலைவணங்கிய நரேந்திரன் பிரதமர் அறையிலிருந்து வெளியே வந்து வராந்தாவில் அமர்ந்து மனம் விட்டு இரண்டு நிமிடங்கள் அழுது தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு தான் கிளம்பினான். மிக அழுத்தமானவன், மன உறுதிபடைத்தவன் என்று நண்பர்களிடம் பெயர்பெற்ற அவன் வாழ்க்கையில் இந்த அளவு உணர்ச்சிவசப்படுவது இதுவே முதல் முறை.. இதுவே கடைசி முறையாகவும் இருக்கும்….

 ராவின் தலைவர் நரேந்திரனிடம் ஒரு உறுதிமொழிக் கடிதத்தை நீட்டினார். இந்த ஃபைலை ரா அலுவலகத்தை விட்டு வெளியே கொண்டு செல்வதில்லை என்றும், அதில் உள்ள டாக்குமெண்டுகளின் நகல்களையும் எந்த வகையிலும் எடுத்துக் கொள்வதில்லை என்றும், எந்த விவரங்களையும் வெளியே கசிய விடாமல் ரகசியம் பாதுகாப்பேன் என்றும் சொல்லும் உறுதிமொழி அது. இது போன்ற உயர் ரகசிய வழக்குகள் மறுபடியும் திறக்கப்படுமானால் அதை விசாரிக்கவிருக்கும் அதிகாரி அந்த உறுதிமொழியில் கையெழுத்திட்ட பிறகே அந்த ஃபைலைப் பெற முடியும். அந்த முறைப்படியான உறுதிமொழிக் கடிதத்தில் நரேந்திரன் கையெழுத்திட்டான்.

 அதை வாங்கிக் கொண்ட பின்ராவின் தலைவர் ஒரு கனமான சாவிக் கொத்தை எடுத்துக் கொண்டு சென்றார். பத்து நிமிடங்களில் ஒரு பெரிய ஃபைலை எடுத்துக் கொண்டு வந்தார்.  அந்த ஃபைலில் MF7865 என்ற எண் குறிக்கப்பட்டிருந்தது.

 ராவின் தலைவர் அதை அவனிடம் நீட்டினார். விதிமுறைகளை அவன் அறிவான் என்றாலும் சம்பிரதாயமாக அவர் சொல்ல வேண்டியதைச் சொன்னார்.  இது உன் அறையை விட்டுத் தாண்டக்கூடாது. நீ இல்லாத நேரங்களில் கண்டிப்பாக உன் மேஜை டிராயரில் வைத்துப் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.  என் அனுமதி இல்லாமல் இதில் உள்ள விவரங்களை நம் ஆட்களிடமே கூட நீ கலந்தாலோசிக்கவோ, விவாதிக்கவோ கூடாது. இதை நீ என்னிடம் திரும்பத் தரும் போது எந்த டாக்குமெண்டுமே இதிலிருந்து நீங்கி இருக்கக்கூடாது

 கண்டிப்பாக விதிமுறைகளைப் பின்பற்றுவேன் சார்என்று நரேந்திரன் உறுதிமொழி அளித்தான்.

 ராவின் தலைவர் மெல்லப் புன்னகைத்து மென்மையாகச் சொன்னார். “இதில் சம்பந்தப்பட்ட மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது.  மிகப் பழைய வழக்குகளை மறுபடி விசாரிப்பதில் இருக்கும் சிக்கலே இது தான்.  ஆனால் உன்னைப் போன்ற திறமைசாலிக்கு, இந்த வழக்கின் உண்மையை அறிவதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு இருப்பவனுக்கு, சிக்கல்களை மீறிச் சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துக்கள்!”

 மிக்க நன்றி சார்என்று தலைவணங்கிச் சொல்லி விட்டு நரேந்திரன் கிளம்பினான்.

 அவன் அலுவல் அறைக்குச் சென்று ஃபைலில் ஆரம்பத்திலிருந்து அந்த முழு வழக்கு விவரங்களையும் படிக்க ஆரம்பித்தான். சில விவரங்களை இரண்டாவது முறையாகப் படிக்க வேண்டியிருந்தது. சில விவரங்களை சிறிது நேரம் கழித்து மறுபடி பின்னுக்கு வந்து அவன் படிக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் யோசித்து அந்தச் சூழ்நிலையை அவன் மனதினுள் உருவகப்படுத்த வேண்டி இருந்தது. .அவன் அனைத்தையும் படித்து முடிக்கையில் இரவாகியிருந்தது.

 அவன் கண்களை மூடிச் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். பின் ஆழ்ந்த வருத்தத்துடன் மெல்ல முணுமுணுத்தான். “அப்பா தர்மம் ஏன் உங்களைக் காக்கத் தவறி விட்டது?”  

 --- (மீதியை நாவலில் படித்துக் கொள்ளலாம்)


நாவலின் விலை ரூ.680/-


ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

 (அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

                                                                   




புதன், 26 ஜனவரி, 2022

இல்லுமினாட்டி

 





என்.கணேசனின் “இல்லுமினாட்டி” நாவல் அவரது இருவேறு உலகம் நாவலின் இரண்டாம் பாகமாகும். இந்த நாவலின் இன்னொரு முக்கிய அம்சம் அமானுஷ்யன் கதாபாத்திரமாக இதிலும் வருகிறான். (இதற்கு முன் அமானுஷ்யன், புத்தம் சரணம் கச்சாமி நாவலில் வந்துள்ளான்).  இல்லுமினாட்டி நாவல் ஜனவரி 2020ல் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகவும் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த இந்த நூலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் வாசகர்களுக்காக இலவசமாய் இங்கே -


இல்லுமினாட்டி 

 என்.கணேசன்


1

 

வன் பெயர் என்னவென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அளவுக்கு அதிகமாய் போதை மருந்தை உட்கொண்டு ம்யூனிக் நகரத்  தெரு ஒன்றில் விழுந்து கிடந்த அவனை அந்த அரசு மருத்துவமனையில் இன்று காலை தான் போலீசார் சேர்த்திருந்தார்கள். அவனை அடையாளம் காட்டக்கூடிய ஆவணம் எதுவும் அவனிடம் இருக்கவில்லை. ஆறடி உயரமும், ஒடிசலான உடல்வாகும் கொண்டிருந்த அவன் முகவாய்க்கட்டையில் ஒரு ஆழமான கீறல் இருந்ததுஅந்த மருத்துவமனையின் மருத்துவர் குழு அவன் ஆசியாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், அவன் வயது முப்பதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தது. நீண்ட கால போதைப் பழக்கத்தினால் முன்பே கெட்டிருந்த அவன் உடல்நிலை கடைசியாக உட்கொண்ட அதிக போதை மருந்தால், மருத்துவமனையில் சேர்த்த போதே, அபாயக்கட்டத்தில் தான் இருந்தது.

அவனைப் பரிசோதித்த தலைமை மருத்துவர் அவனைச் சேர்த்த போலீசாரிடம் காலையிலேயே சொல்லியிருந்தார். “இவன் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. இவன் குடும்பத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால் தெரிவித்து விடுங்கள்….”

இவன் இந்த நகரத்தைச் சேர்ந்தவன் போலத் தெரியவில்லை. எங்கிருந்தோ இங்கு வந்திருக்கலாம்…..  இவன் புகைப்படத்தைப் பத்திரிக்கைகளுக்கும் டிவி சேனல்களுக்கும் அனுப்பி இவன் இங்கிருப்பதைத் தெரிவிக்கிறோம்என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னபடியே இப்போது மாலை நாலரை மணிச் செய்தியில் அவன் படம் டிவியில் காட்டப்படுவதை தலைமை மருத்துவர் பார்த்தார். மருத்துவமனையின் விலாசத்தையும், தொலைபேசி எண்களையும் கூடவே தெரிவித்திருந்தார்கள். இதைப் பார்த்து விட்டு யாராவது இங்கு வரலாம். அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தபடியே தலைமை மருத்துவர் கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.

அவரது அறை இரண்டாவது மாடியில் இருந்ததால் தெரு முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு ஒரு கருப்புக்கார் அப்போது தான் வந்து நின்றது. ஆஜானுபாகுவாக ஒருவன் இறங்கியதும், அவனைத் தொடர்ந்து கண்கள் கருப்புத்துணியால் கட்டப்பட்ட ஒரு இளைஞன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து இன்னொரு ஆஜானுபாகுவான ஆள் இறங்கினான். அவர் கூர்ந்து பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மூவரும் அந்தக் கட்டிடத்திற்குள் போய் விட்டார்கள்.

தலைமை மருத்துவருக்கு அந்தத் தெருக்கோடிக் கட்டிடமே ஏதோ ரகசியங்களும், ஆபத்தும் நிறைந்த இடமாகத் தோன்றியது. இன்று பிற்பகல் சுமார் மூன்று மணி அளவில் மிக விலை உயர்ந்த கார்கள் வரிசை வரிசையாக அங்கு வந்து சேர்ந்ததை அவர் கவனிக்க நேர்ந்தது. கார்களில் இருந்து இறங்கி உள்ளே சென்ற அனைவரும் செல்வந்தர்களாகவும், அதிகாரங்கள் படைத்தவர்களாகவும் தோன்றியிருந்தார்கள்….. இப்போது கண்களைக் கட்டி யாரையோ அழைத்துக் கொண்டு போகிறார்கள். அங்கு என்ன நடக்கிறது, நடத்துபவர்கள் யார் என்பதெல்லாம் தெரியவில்லை….

 

அவர் சிந்தனைகளைக் கலைத்தபடி நர்ஸ் ஒருத்தி அந்த அனாமதேய போதை மனிதனின் ஸ்கேன் ரிப்போர்ட்களை அவர் மேசையில் வைத்து விட்டுப் போனாள். தலைமை மருத்துவர் ஒருவித சலிப்புடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெயர் தெரியாத போதை மனிதன் சாகப்போகிறான் என்றாலும் அவனுடைய எல்லா ரிப்போர்ட்களையும் ஃபைல் செய்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் அவை தேவைப்படலாம். உறவினர்கள் யாராவது வழக்கு போடும் வாய்ப்பும் இருக்கிறது. இறந்தும் அந்த மனிதன் பிரச்னையாகலாம்…..

அவர் அவனுடைய எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் பிரித்துப் பார்த்தார். அவன் பெயர் தெரியாததால் அந்த எல்லா ரிப்போர்ட்களிலும் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்றே இருந்தது. தலைமை மருத்துவர் முகத்தில் சின்னதாய் புன்னகை அரும்பியது. அவர் அந்த ரிப்போர்ட்களைப் படிக்க ஆரம்பித்தார். அந்த பரிசோதனைக் குறிப்புகள் எல்லாமே அவர் முன்பே எண்ணியிருந்தபடி மிக மோசமாகவே இருந்தன. அந்த ஆள் மரணத்தை நெருங்கி விட்டான். இனி அதிகபட்சம் ஓரிரு மணி நேரங்கள் தான் அவன் உயிரோடிருக்கும் வாய்ப்பிருக்கிறது…. அவன் இறந்த பின்னும் யாரும் உறவினர்கள் வரா விட்டால் அவன் பிணத்தை என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். அதில் நிறைய சட்டச்சிக்கல்கள் இருக்கின்றன. எல்லாம் விதிமுறைகளின்படி தான் கவனமாகச் செய்தாக வேண்டும்…..

தலைமை மருத்துவர் அந்தப் போதை மனிதனின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட்களை எல்லாம் தொகுத்து ஒரு சுருக்கமான அறிக்கை ஒன்றைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அவன் இறந்தவுடன் அவனைக் காலையில் சேர்த்து விட்டுப் போன போலீஸ்காரர்களுக்குப் போன் செய்து வரவழைத்து அவர்களிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேச வேண்டும்….

திடீரென்று எங்கிருந்தோ கிதார் இசை லேசாகக் கேட்க ஆரம்பித்தது. அந்தக் கிதார் இசை இனிமையாக இருந்த அதே நேரத்தில் சற்று அமானுஷ்யமாகவும் இருந்தது போல அவர் உணர்ந்தார். சில நிமிடங்களில் நர்ஸ் ஒருத்தி வேகமாக அவர் அறைக்குள் வந்து சொன்னாள். “டாக்டர் அந்தப் போதை மனிதன் எக்ஸ் கிட்டத்தட்ட இறந்து விட்டான் போல இருந்தது. அவனுடைய இதயத்துடிப்பு எல்லாம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் திடீர் என்று இப்போது அவனுக்கு ஜன்னி வந்தது போல் உடம்பெல்லாம் நடுங்குகிறது…..”

சிலருக்கு மரணத்திற்கு முன்பு அப்படி ஆவது உண்டு என்பதால் தலைமை மருத்துவர் ஆச்சரியப்படவில்லை. அவன் அருகில் யார் இருக்கிறார்கள் என்று அவளிடம் விசாரித்தார். அவள் உதவி மருத்துவர் ஒருவரின் பெயரைச் சொன்னவுடன் அவர் திருப்தியடைந்தார். இப்போது அந்தக் கிதார் இசை தான் அவரைக் குழப்பியது.

எங்கிருந்து இந்த கிதார் இசை கேட்கிறது?” என்று அவர் நர்ஸைக் கேட்டார். அவள் கண்களை மூடிக் கவனமாக அந்த இசை வரும் இடத்தை யூகிக்க முயன்றாள். முயற்சி செய்தும் அவளுக்கு முடிவாகச் சொல்ல முடியவில்லை. பக்கத்தில் தான் யாரோ வாசிப்பது போல அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்தபக்கத்தைஉறுதியாக அவளால் சுட்டிக் காட்ட முடியவில்லை…. “சரியாகத் தெரியவில்லைஎன்று தயக்கத்துடன் சொல்லி விட்டுப் பிறகு அதற்கு அதிக முக்கியத்துவம் எதுவும் தராமல் அவள் போய் விட்டாள்.

தலைமை மருத்துவர் எழுந்து போய் கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வெளியே பார்வைக்குப் படுவது போல் யாரும் கிதார் வாசித்துக் கொண்டிருக்கவில்லை. ஏனோ அவர் தெருக்கோடியில் இருந்த அந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்த்தார். அங்கும் கட்டிடத்திற்கு வெளியே யாரும் தெரியவில்லை. கண்களை மூடி அவரும் கிதார் இசை வரும் இடத்தை அறிய முயன்றார். இந்த மருத்துவமனைக்குள்ளேயே தான் அந்த இசை கேட்பது போல் இருந்தது.

இந்த இசை எங்கிருந்து கேட்டால் நமக்கென்னஎன்பது போல தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர் மறுபடியும் அந்த அறிக்கை தயாரிக்கும் வேலையைத் தொடர்ந்தார். கால் மணி நேரத்திற்குப் பின் எக்ஸ் அருகே இருந்த அந்த உதவி மருத்துவரே வந்தார். ”அவன் பிழைத்துக் கொள்வான் போலிருக்கிறது டாக்டர். அவன் உடல்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருக்கிறது…..”

தலைமை மருத்துவர் திகைப்புடன் அவரைப் பார்த்தார். அவர் முன்னால் இருக்கும் ரிப்போர்ட்கள் எதிலும் அவன் பிழைத்துக் கொள்வதற்கான அறிகுறிகள் ஒரு சதவீதம் கூட இருக்கவில்லை….. அவர் குழப்பத்துடன் மெல்ல எழுந்தார். கிதார் இசை இப்போதும் கேட்டுக் கொண்டு தானிருந்தது.

இருவரும் சேர்ந்து மிஸ்டர் எக்ஸ் இருக்கும் பகுதியை நோக்கிச் செல்கையில் தலைமை மருத்துவர் அந்த உதவி மருத்துவரிடம் கேட்டார். “கிதார் இசை எங்கேயிருந்து கேட்கிறது?”

உதவி மருத்துவர் சொன்னார். “இந்த ஆஸ்பத்திரியிலேயே யாரோ வாசிக்கிற மாதிரி தான் தெரிகிறது…. எங்கேயிருந்து என்று சரியாகத் தெரியவில்லை…”

அடுத்த சில நிமிடங்களில் தலைமை மருத்துவர் அந்தக் கிதார் இசை உட்பட அனைத்தையும் மறந்து போனார். மிஸ்டர் எக்ஸின் உடலில் தெரிய ஆரம்பித்த மாற்றங்கள் இது வரை அவர் படித்திருந்த மருத்துவத்தைக் கேலி செய்வது போல் இருந்தன. அவர் போன போது அவன் உடலின் வெப்பம் அபாயக்கட்டத்தையும் மீறி அதிகமாக இருந்தது. உடல் அனலாய் கொதித்தது. தர்மாமீட்டர் 106 டிகிரி ஃபாரன்ஹீட் காட்டியது. ஆனால் அதனால் அவன் உடல் எந்தப் பெரிய பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மிகக்குறைவாக இருந்த இதயத்துடிப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டு வந்தது. தலைமை மருத்துவருக்கு அவன் உடலில் அசாதாரணமாக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. ஆனால் எதுவுமே அவன் வாழ்க்கையை முடிக்கிற விதமாய்த் தெரியவில்லை….

திடீரென்று அவன் கண் விழித்தான். அவன் கண்கள் அமைதியாக அவர்களைப் பார்த்தன.

தலைமை மருத்துவர் குனிந்து அவனிடம் கேட்டார். “நீ யார்? உன் பெயர் என்ன?”

 

2

 

லைமை மருத்துவர் நீ யார், உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு அந்தப் போதை மனிதன் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சின்னதாய் புன்னகை அவன் உதடுகளில் வந்து மறைந்தது. ஏனோ அந்தப் புன்னகை அவர் ரத்தத்தை உறைய வைப்பது போல் வில்லத்தனமாய் இருந்தது. உடனே அவர் அப்படி உணர்வது அர்த்தமில்லாதது என்று நினைத்தார். உண்மையில் அவர் கேட்ட கேள்வி அவன் மூளையை எட்டியிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இது போன்ற அதிகபட்ச காய்ச்சல் சமயத்தில் இப்படி நடப்பதுண்டு. ஏதோ ஒரு கற்பனைக் காட்சியில் நோயாளி சஞ்சரிப்பதுண்டு. அவன் கற்பனையில் என்ன பார்த்துப் புன்னகைக்கிறானோ என்று எண்ணியவராக அவர் மறுபடி அவனிடம் கேட்டார். “நான் கேட்டது புரிகிறதா? நீ யார்? உன் பெயர் என்ன?”

அவன் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். களைத்திருக்கிறான் என்பதாகத் தலைமை மருத்துவர் புரிந்து கொண்டார். நினைவு திரும்பி அவன் பெயரைச் சொல்லும் வரை அவன் எக்ஸ் தான்முதலில் அவன் காய்ச்சலைக் குறைக்க வேண்டும், பின் அவன்  உடலில் சக்தியை அதிகரிக்க வேண்டும், பிறகு தான் அவனுக்குச் சரியாக நினைவு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது…. அதற்கான மருந்துகளை அவன் உடலில் ஏற்ற உதவி மருத்துவரிடம் உத்தரவிட்டு விட்டுத் தன் அறைக்கு அவர் திரும்பினார்.

மறுபடியும் தன் மேசையிலிருந்த எல்லா ஸ்கேன் ரிப்போர்ட்களையும் அவர் எடுத்துப் படித்தார். முன்பு அவர் அனுமானத்திற்கு வந்திருந்தபடியே ஒரு ரிப்போர்ட்டில் கூட அவன் உயிர்பிழைக்கும் வாய்ப்பின் தடயம் கூட இல்லை. இவன் பிழைத்துக் கொண்டால் மருத்துவ உலகில் ஒரு அதிசயம் நிகழ்த்தியவனாகக் கருதப்படுவான் என்று தோன்றியது. உடனே அவர் இண்டர்காமில் அழைத்து அவன் உடல்நிலை ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பியவுடன்  மறுபடியும் ஸ்கேன்கள் செய்யச் சொன்னார்.

அவர் பார்வை கண்ணாடி ஜன்னல் வழியே வீதிக்கு போனது. இப்போது விலை உயர்ந்த கார்கள் அந்தத் தெருக்கோடிக் கட்டிடத்திலிருந்து சாரை சாரையாக வெளியே வந்து கொண்டிருந்தன.  அதைப் பார்த்தபடி சிறிது நின்று விட்டுப் பின் மற்ற நோயாளிகளைப் பார்க்க அவர் கிளம்பினார். திடீர் என்று கிதார் இசை நினைவுக்கு வந்தது. இப்போது அது கேட்கவில்லை. எப்போது நின்றது என்று தெரியவில்லைஎன்னவோ எல்லாமே விசித்திரமாய் நடக்கின்றன என்று எண்ணியவர் அடுத்த ஒன்றரை மணி நேரம் எல்லா நோயாளிகளையும் பார்த்து விட்டு வரும் வரை மற்ற எல்லாவற்றையும் மறந்திருந்தார். கடைசியாக மறுபடியும் எக்ஸ் அறைக்குப் போனார்.

அவரைப் பார்த்தவுடன் அந்த உதவி மருத்துவர் சொன்னார். “ஒரு கட்டத்தில் 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சல் இப்போது தான் குறைய ஆரம்பித்திருக்கிறது. 103 டிகிரிக்கு வந்திருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்த மூளையின் ஸ்கேன் ரிப்போர்ட்கள் குழப்புகின்றன டாக்டர். அசாதாரணமான அதிகப்படியான செயல்கள் மூளையில் தெரிகின்றன…..”

அவர் சொல்லிவிட்டு ஸ்கேன் படங்களைக் காட்டிய போது தலைமை மருத்துவர் திகைப்பின் எல்லைக்கே போனார். அவர் அறையில் இருந்த ரிப்போர்ட்டுகளுக்கு நேர்மாறாக உச்சக்கட்ட அளவில் மூளைச் செயல்பாடுகள் இருந்தன. அவர் சொன்னார். “ஸ்கேனிங் மெஷினில் ஏதாவது பிரச்னை இருக்குமோ?”

உதவி மருத்துவர் சொன்னார். “நானும் அதைத் தான் கேட்டேன். ஸ்கேன் ஆபரேட்டர் மெஷின் சரியாகத் தான் இருக்கிறது, இந்த எக்ஸ் சூப்பர் மேனாக இருக்கலாம். யார் கண்டது என்று கிண்டலாகச் சொல்கிறான்….”

எக்ஸ் விஷயத்தில் எங்கோ ஏதோ குழப்பும்படியான தவறுகள் அல்லது பிரமிக்கும்படியான அதிசயங்கள் நடந்திருப்பதாக தலைமை மருத்துவர் நினைத்தார். 107 டிகிரி வரை ஏறிய காய்ச்சலும், மூளையின் அளவுக்கதிகமான செயல்பாடுகளும், சாகக்கிடந்த அவன் உயிர் பிழைத்திருப்பதும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது தலைசுற்றியது. இவன் இயல்புநிலைக்குத் திரும்பி வாய்திறந்து பேசினால் தான் பல விஷயங்கள் புரியும் என்று அவருக்குத் தோன்றியது.

தலைமை மருத்துவர் எக்ஸ் அருகே சென்று பார்த்தார். இப்போது அவன் உடல் சீரடைந்து வருவதாகத் தோன்றியது. மூச்சு சீராக இருந்தது. அவர் உதவி மருத்துவரிடம் சொன்னார். “அவன் இரவு நன்றாக உறங்கி ஓய்வு எடுக்கட்டும். நாளை காலையில் அவனிடம் பேசுவோம்…..”

அவர் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். செல்வதற்கு முன் ரிசப்ஸனில் எக்ஸைக் கேட்டு யாராவது போன் செய்தார்களா என்று கேட்டார். இல்லை என்று பதில் வந்தது. அவன் வீட்டார், நெருங்கியவர்கள் யாரும் டிவியில் அவனைக் குறித்து வெளியிட்ட செய்தியைப் பார்க்கவில்லை போல் இருக்கிறது….

 

டுத்தநாள் அதிகாலையிலேயே அவருடைய அலைபேசி இசைத்து அவரை உறக்கத்திலிருந்து எழுப்பியது. அவர் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். காலை மணி 5.05. அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அழைப்பு மருத்துவமனையிலிருந்து தான் வருகிறதுபேசினார். “ஹலோ

நர்ஸ் ஒருத்தி பேசினாள். “டாக்டர், அந்தப் போதை நோயாளி எக்ஸைக் காணோம்

திகைத்த அவர் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். சில சமயங்களில் இது போன்ற ஆட்கள் மயக்கநிலையில் எழுந்து நடப்பதுண்டு. வேறெதாவது அறைக்குச் சென்று படுத்திருக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்தவராக அவர் கேட்டார். “ஆஸ்பத்திரியில் எல்லா இடங்களிலும் தேடினீர்களா?”

எல்லா இடங்களிலும் பார்த்து விட்டோம் டாக்டர். இங்கு எங்கும் இல்லை

எக்ஸ் ஏன் இப்படிப் படுத்துகிறான் என்று எண்ணியபடி அவர் சொன்னார். “போலீஸுக்கும் போன் செய்து தகவலைத் தெரிவித்து விடுங்கள். நான் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.”

அவர் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்த சமயம் எக்ஸை அங்கு கொண்டு வந்த போலீஸார் இருவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்களிடம் நேற்றைய அதிசய நிகழ்வுகளை அவர் தெரிவித்தார். அவர்கள் இருவரும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டார்கள்பின் எக்ஸை யார் கடைசியாக எப்போது பார்த்தார்கள் என்று விசாரித்தார்கள். உதவி மருத்துவர் இரவு 10.30க்கு காய்ச்சல் எந்த அளவு இருக்கிறது என்று பரிசோதித்ததாகவும் அப்போது 99 டிகிரிக்கு காய்ச்சல் இறங்கி இருந்ததாகவும் சொன்னார். நர்ஸ் ஒருத்தி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அறைக்கு வந்த போது எக்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததைப் பார்த்ததாகச் சொன்னாள்.

கடைசியில் ஒரு போலீஸ்காரர் சொன்னார். “அந்த நேரத்திற்குப் பிறகு சிசிடிவி காமிராவில் பார்த்தால் என்ன நடந்திருக்கிறது என்று தெரியும்.”

அறைகளில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்றாலும் வராந்தாக்களில் அந்தக் காமிராக்கள் இருந்தன. அறையை விட்டு யார் வந்தாலும், அறைக்குள் யார் சென்றாலும் அந்தக் காமிராக்களில் கண்டிப்பாகப் பதிந்திருக்கும் என்பதால் பரபரப்புடன் அந்த அறைக்கு வெளியே இருந்த வராந்தாவில் இரவு ஒன்றரை மணிக்குப் பிறகு பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

காமிராப்பதிவுகள் காலி வராந்தாவையே அதிகம் காட்டியது. நீண்ட இடைவெளிகளில் ஒரு நோயாளியோ, அவர் உடனிருப்பவரோ, நர்ஸ்களோ வராந்தாவில் தெரிந்தார்கள். ஆனால் அவர்கள் வந்து போனது வேறு அறைகளிலிருந்து தான்யாரும் எக்ஸ் அறையிலிருந்து வெளியே வரவோ, உள்ளே போகவோ இல்லைதிடீரென்று எக்ஸின் அறையிலிருந்து எக்ஸ் வெளியே எட்டிப் பார்ப்பது தெரிந்தது. உடனே அவர்கள் அந்தக் காமிராப்பதிவு காட்டிய நேரத்தைப் பார்த்தார்கள். காலை மணி 3.37.

வெளியே வராந்தாவில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன் எக்ஸ் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவன் வராந்தாவைத் தாண்டிய காட்சி முடிந்ததும் மற்ற தொடர்பகுதிகளின் காமிராப்பதிவுகளை அவர்கள் பார்த்தார்கள். அவன் ஒரே ஒரு பகுதியில் மட்டும் ஒரு நர்ஸ் வருவதைப் பார்த்து மறைந்து நின்றான். அவள் ஒரு அறைக்குள் நுழைந்தவுடன் வேகமாக அந்த அறையைக் கடந்தான். கடைசியில் மணி 3.48ல் அவன்  மருத்துவமனையை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

ஒரு போலீஸ்காரர் சொன்னார். “கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு முன்பே ஆஸ்பத்திரியை விட்டுப் போய் விட்டான்….”

இன்னொரு போலீஸ்காரர் தலைமை மருத்துவரிடம் சொன்னார். ”அவன் பிழைக்க வழியே இல்லை என்றீர்கள். ஆனால் அவன் பிழைத்துக் கொண்டது மட்டுமல்ல ஒரே நாளில் உங்கள் ஆஸ்பத்திரியை விட்டு அவனாகவே நடந்து வெளியே போயிருக்கிறான்

தலைமை மருத்துவர் சொன்னார். “நேற்றிலிருந்து அவன் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறான். இனி நான் அவன் சிகிச்சைக் கணக்கை எப்படி மூடுவது? அவன் செத்திருந்தாலாவது அனாமதேய போதை மனிதன், அனாதைப் பிணம் என்று எழுதி முடித்திருப்பேன்

கவலைப்படாதீர்கள். உயிர் போகிற அளவுக்கு போதை மருந்து சாப்பிட்ட ஆள் அந்தப் பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதால் கண்டிப்பாக சீக்கிரமே மறுபடி சாப்பிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பான். அல்லது செத்தும் கிடக்கலாம். அப்போது பார்க்கலாம்…. அவன் இங்கே இருந்த சமயத்தில் வேறெதாவது வித்தியாசமாக நடந்திருக்கிறதா?...”

தலைமை மருத்துவர் சொன்னார். “யாரோ நிறைய நேரம் கிதார் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அது ஆஸ்பத்திரிக்குள்ளேயே வாசித்தது போல் தான் இருந்தது. அது யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எக்ஸுக்கும் சம்பந்தமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எல்லோரும் காதால் கேட்டும், ஒருவராலும் அது எங்கிருந்து கேட்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது விசித்திரமாக இருந்தது….”      


---- மீதியை நாவலில் படித்துக் கொள்ளலாம். விலை ரூ.650/-                                        

ஆன்லைனில் அமேசானில் இந்த அச்சு நாவலை வாங்கலாம். லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


 நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.